×

கணவன் க்வாட்டர் அடிச்சார் -மனைவி ஆஃப் அடிச்சார் -மப்பு ஏறிய மனைவி செஞ்ச காரியம்.

குடிபோதை அதிகமாகி ஒரு மனைவி தன்னுடைய கணவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பலரை அதிர வைத்துள்ளது கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் நவூர் கிராமத்தில் வசிக்கும் 60 வயது சேசப்ப பூஜரியும் அவரின் மனைவி 50 வயதான உமாவதியும் தங்களின் டீனேஜ் மகளோடு வசித்து வந்தார்கள் .இந்த தம்பதிகளுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் இருக்கிறது .அதனால் இருவரும் தினமும் இரவு நேரத்தில் மது அருந்தி வந்துள்ளார்கள் .இது அவரின் மகளுக்கும் தெரியும் . தினமும் கணவன்
 

குடிபோதை அதிகமாகி ஒரு மனைவி தன்னுடைய கணவரை  வெட்டி கொலை செய்த சம்பவம் பலரை அதிர வைத்துள்ளது

கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் நவூர் கிராமத்தில் வசிக்கும் 60 வயது சேசப்ப பூஜரியும் அவரின் மனைவி 50 வயதான உமாவதியும் தங்களின் டீனேஜ் மகளோடு வசித்து வந்தார்கள் .இந்த தம்பதிகளுக்கு தினமும் குடிக்கும் பழக்கம் இருக்கிறது .அதனால் இருவரும் தினமும் இரவு நேரத்தில் மது அருந்தி வந்துள்ளார்கள் .இது அவரின் மகளுக்கும் தெரியும் .

தினமும் கணவன் மனைவி இருவரும் மது குடித்து விட்டு சண்டை போட்டு கொள்வார்கள் .பின்னர் மறுநாள் சமாதானமாகி விடுவார்கள் .இது அன்றாடம் அந்த வீட்டில் நடக்கும் நிகழ்வு ஆகும் .இந்நிலையில்  கடந்த வாரம் மார்ச் 3 ஆம் தேதி இரவு வழக்கம் போல இருவரும் மது அருந்தி கொண்டிருந்தார்கள் .அப்போது அவரின் மனைவி உமாவதி அதிகமாக குடித்து விட்டார். அதனால்  அவருக்கு போதை அதிகமாகியுள்ளது .அந்த போதையில் கணவன் மனைவிக்குள் சண்டை வந்துள்ளது .அந்த நேரத்தில் போதை அதிகமாயிருந்த அந்த பெண் அங்கிருந்த ஒரு அறிவாளை  எடுத்து தன்னுடைய கணவரை வெட்டி சாய்த்தார் .இந்த அருவாள் தாக்குதலில் அந்த கணவர் அங்கேயே  ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .அதை பார்த்த அவரின் மகள் அவரின் காயத்திற்கு வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்த்தார் .மருத்துவமனை சென்றால் தாங்கள் சிக்கிவிடுவோம் என்று இப்படி செய்துள்ளார்கள் .பின்னர் மறுநாள் அந்த வீட்டிலேயே அந்த கணவர் இறந்தார் .இந்த கொலை விஷயம் போலீசுக்கு தெரிய வந்து விசாரணை மேற்கொண்ட போது,அந்த மனைவி தன் கணவன் கீழே விழுந்து இறந்து விட்டதாக பொய் சொன்னார் .ஆனால் அவரின் மகள் தன் தாய் கொலை செய்த விஷயத்தை போலீசிடம் கூறினார் .அதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை கொன்ற உமாவதியை கைது செய்தனர்.