×

ஓடிய கார் -மூடிய கதவு -ஓலமிட்ட சிறுமி -காருக்குள் கடத்தி கற்பழித்த இளைஞர் கூட்டம் -போதையால் மாறிய பாதை 

ஹரியானாவில் 15 வயது சிறுமியை போதை தலைக்கேறிய இளைஞர்கள் காருக்குள் கடத்தி சென்று ,அந்த போகும் காருக்குளேயே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது . ஹரியானாவின் பானிபட் நகரில் ஓடும் காரில் 15 வயது சிறுமி இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் , அவர்களில் ஒருவர் அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். ஹரியானாவில் 15 வயது சிறுமியை போதை தலைக்கேறிய இளைஞர்கள் காருக்குள் கடத்தி சென்று ,அந்த போகும் காருக்குளேயே பலாத்காரம்
 

ஹரியானாவில் 15 வயது சிறுமியை போதை தலைக்கேறிய  இளைஞர்கள் காருக்குள் கடத்தி சென்று ,அந்த போகும் காருக்குளேயே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

ஹரியானாவின் பானிபட் நகரில் ஓடும்  காரில் 15 வயது சிறுமி இரண்டு இளைஞர்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் , அவர்களில் ஒருவர் அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஹரியானாவில் 15 வயது சிறுமியை போதை தலைக்கேறிய  இளைஞர்கள் காருக்குள் கடத்தி சென்று ,அந்த போகும் காருக்குளேயே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

ஹரியானாவின் பானிபட் நகரில் ஓடும்  காரில் 15 வயது சிறுமி இரண்டு இளைஞர்களால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் , அவர்களில் ஒருவர் அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

அந்த பெண்  வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு   திரும்பவில்லை என்றும் , மாலை தாமதமாக, டவுன் பகுதியில் அவர் மயக்கத்தில் கிடப்பதாக  குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்து போனதாக கூறினர் .
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அப்பெண்ணுக்கு  அறிமுகமானவராதலால் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குற்றம் நடந்த இடத்திற்கு அருகே அவரை அழைத்து சென்றதாகவும்  அங்கு  ஒரு காரில் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள், மதுவை அவரை  கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததால்  அவர்  மயக்கம் அடைந்தார் .

பின்னர் அப்பெண்ணை  இரண்டு இளைஞர்கள்  ஒரு காரில் அழைத்துச் சென்று , ஓடும்  வாகனத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் . அதற்கு பிறகு , குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை தனது ஸ்கூட்டர் நிறுத்தி வைத்திருந்த பூங்கா அருகே விட்டுவிட்டார்.
அந்த  11 ஆம் வகுப்பு மாணவி   பூங்கா அருகே மயக்க நிலையில் கிடந்தபோது ,அந்த வழியாக போனவர்கள் அப்பெண்ணை  வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் . 
பிறகு  குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்  செய்யப்பட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சுமித் குமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.