×

உல்லாச வீடியோக்களை இணையத்தில் வெளியிட்ட காதலி: மனமுடைந்த காதலன் தற்கொலை; காரணம் இதுதானாம்!?

காதலி தனிமையில் இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதால் மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் : காதலி தனிமையில் இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதால் மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் நஞ்சன்கூடு தாலுகா மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தீவிரமாகக் காதலித்து வந்த
 

காதலி  தனிமையில் இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதால் மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மைசூர் : காதலி  தனிமையில் இருக்கும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதால் மனம் உடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மைசூர்  நஞ்சன்கூடு தாலுகா மல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரீஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.  தீவிரமாகக் காதலித்து வந்த இவர்கள் அடிக்கடி தனிமையிலிருந்து வந்துள்ளனர். அப்போது இவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில்  கிரீஷுக்கும் அவரது காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலியை திருமணம் செய்ய கிரீஷ் மறுத்ததாகக்  கூறப்படுகிறது. இதையடுத்து கிரீஸும் அவரது காதலியும் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வேகமாக பரவியுள்ளது. இதைக்கண்ட கிரீஷின் நண்பர்கள் அதை அவரிடம் சொல்ல, அதைக் கண்டு மனமுடைந்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருமணத்திற்கு மறுத்ததால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கிரீஷின் காதலியே இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கிரீஷின் காதலியைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.