×

இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலர் சரண்: பதற வைக்கும் சம்பவம்!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். தூத்துக்குடி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அனல்மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாராணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து
 

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த  வழக்கில்  முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

தூத்துக்குடி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த  வழக்கில்  முன்னாள் காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அனல்மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாராணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். 

மகாராணியுடன் இளவரசன் என்ற இளைஞர் நெருங்கி பழகிவந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இளவரசனை போலீசார் தேடி நிலையில் அவர் தென்காசி நீதிமன்றத்தில் இளவரசன் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய  முதற்கட்ட விசாரணையில், இளவரசனுக்கு மகாராணிக்கு ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. இது நடேசனுக்கு தெரியவர அவர் மகாராணியை கண்டித்துள்ளார். இதையடுத்து மகாராணி இளவரசனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த இளவரசன் மகாராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை சமாதானம் செய்ய சென்றுள்ளார்.

ஆனால் அவர் இளவரசனுடன் பேச மறுத்துள்ளார்.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த பிளேடு கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.  இதையடுத்து நீதிமன்றத்தில் இளவரசனை  ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.