×

ஆபரேஷன் தியேட்டரில் பாலியல் தொல்லை: மயக்கம் தெளிந்து எழுந்த பெண் கூறிய அதிர்ச்சி தகவல்!?

பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை : பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மூட்டுவலிக்கான அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தனக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.
 

பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனையில் மூட்டுவலிக்கான அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தனக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்தார்கள். மயக்கமாக இருந்ததால் அதை என்னால் தடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதைக்  கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அப்பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட அவர்கள் அப்படி  நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறி மறுத்துள்ளனர். இதையடுத்து அப்பெண்  துரைப்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மயக்க மருந்து பிரிவில் பணியாற்றும் வேலூரைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர்  இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம்  அவரை பணியை விட்டு நீக்கியுள்ளது. மேலும் போலீசார் அவரை கைது செய்து வேறு யாரிடமாவது இவ்வாறு நடந்து கொண்டுள்ளாரா என்று விசாரித்து வருகின்றனர்.  நோயாளியாகச் செல்லும் இடத்தில் கூட பெண்களின் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இது போன்ற வக்கிர புத்தியுள்ள ஆட்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.