×

‘அழுகிய நிலையில் கால் எலும்பு உடைந்து வெளியே தெரிந்த சிறுமியின் சடலம்’ கல்குவாரியில் நடந்த பயங்கரம்!

அந்த பக்கம் சென்றவர்கள் போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். வேலூரை அடுத்த புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் அருகே உள்ள கல்குவாரியில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அந்த பக்கம் சென்றவர்கள் போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல்
 

அந்த பக்கம் சென்றவர்கள் போலீசுக்கு இதுகுறித்து  தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

வேலூரை அடுத்த புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் அருகே உள்ள கல்குவாரியில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அந்த பக்கம் சென்றவர்கள் போலீசுக்கு இதுகுறித்து  தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்கள்  குறித்த புகார்களை ஆய்வு செய்த போது அது வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா என்பது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் வலது கால் எலும்பு உடைந்து வெளியே தெரிந்த நிலையில் இருந்ததால் அவரின் கையிலிருந்த டாட்டூவை வைத்து அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்தனர்.

 

12 ஆம் வகுப்பு படித்துள்ள நிவேதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி வழக்கம்போல  வேலைக்கு  சென்ற நிவேதா வீடு திரும்பவில்லை. இதனால் கடந்த 16 ஆம் தேதி நிவேதாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.  நிவேதா கொணவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அதேபோல் மருத்துவமனையில் பணிபுரிந்த இளைஞருடனும் பழகி வந்துள்ளார். நிவேதாவை இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தி வந்துள்ளார்.

இதை தொடர்ந்து  14-ந் தேதி வேலைக்கு சென்ற நிவேதாவை  காதலித்த இளைஞர்  ஒருவர் தீர்த்தகிரி மலைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறில் மலை மீது இருந்து தள்ளி கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த  கொலை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரத் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.