அழகான பையனை “அதற்கு” பயன்படுத்திய பாதகர்கள்: விடுதியில் உள்ளவர்களால் விரக்தியடைந்த மாணவன் தூக்கு..
18 வயது சிறுவன் பள்ளித் தோழர்கள், விடுதி ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொண்டான்
மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்களால் தவறாமல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுவன் குறிப்பிட்டுள்ள எழுதிய ஒரு நோட்புக் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
18 வயது சிறுவன் பள்ளித் தோழர்கள், விடுதி ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொண்டான்
மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்களால் தவறாமல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுவன் குறிப்பிட்டுள்ள எழுதிய ஒரு நோட்புக் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சந்திரபூர் மாவட்டத்தில் 18 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவன் தனது பள்ளித் தோழர்கள் மற்றும் சில விடுதி ஊழியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்த 12 ஆம் வகுப்பு மாணவன் , மாவட்டத்தின் மராய் படான் கிராமத்தில் உள்ள ஜிவதி தஹ்சில் அமைந்துள்ள செவாடல் பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.
மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும் பிற சக மாணவர்களால் தவறாமல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுவன் குறிப்பிட்டுள்ள தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து ஒரு நோட்புக் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கடந்த காலங்களில் தான் அழகாக இருந்ததால் எதிர்கொண்ட சோகமான சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து துணை பிரதேச காவல்துறை அதிகாரி ஷில்வந்த் நந்தேத்கர் கூறுகையில், “இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 377 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) ஆகியவற்றின் கீழ் 11 மாணவர்கள் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். “என்றார்