×

அமெரிக்க தூதரகத்திலிருந்து ஐந்து வயது சிறுமியின் அலறல் சத்தம் -வாட்ச்மேன் மகளை வன்கொடுமை செய்த வாலிபர் …

சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும்,சிறுமியின் தாயார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து விசாரித்தபோது ,இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனிக்கிழமை காலை டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளியின் 5 வயது சிறுமியை அங்குள்ள ஒரு வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஐந்து வயது மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக
 

சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும்,சிறுமியின் தாயார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து விசாரித்தபோது ,இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

சனிக்கிழமை காலை டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பணிபுரியும்  தொழிலாளியின் 5 வயது சிறுமியை அங்குள்ள ஒரு வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லியில்  உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஐந்து வயது மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும்,சிறுமியின் தாயார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து விசாரித்தபோது ,இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது கணவர் தூதரகத்தில் வீட்டுக்காப்பாளராக பணிபுரிகிறார் என்று தெரியவந்துள்ளது .

“தூதரகத்திற்குள் உள்ள குடியிருப்பில்  குழந்தை குடும்பத்துடன் வசித்து வந்தது. குழந்தையின் தந்தை அங்கு ஒரு வீட்டு வேலைக்காரராக பணிபுரிகிறார் . இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சனக்யபுரி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்,” என்று ஏ.சி.பி பிரக்யா கூறினார்.பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.