×

அ.தி.மு.க பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. நள்ளிரவில் நடந்த கொடூரம்!

இவர் நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டு வாசலுக்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அல்லம் பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் ராஜன் என்பவர் அதிமுக கட்சியின் மாணவரணி தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டு வாசலுக்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில், சண்முகவேல் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்ததும் மர்ம
 

இவர் நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டு வாசலுக்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அல்லம் பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் ராஜன் என்பவர் அதிமுக கட்சியின் மாணவரணி தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டு வாசலுக்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அதில், சண்முகவேல் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பொது மக்கள், சண்முகவேல் கீழே ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். 

அதன் பின், அங்கே விரைந்து வந்த விருதுநகர் கிழக்கு காவல்துறையினர் சண்முகவேல் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து, காவலர்கள் நடத்திய விசாரணையில் சில மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்காக, பழி வாங்கும் நோக்கில் சண்முகவேலைக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. சண்முக வேலை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.