×

ஃபேஸ்புக்கால் சிக்கித் தவிக்கும் பெண்கள் – பணத்தை சூரையாடும் நபர்

பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக ஏமாற்றி பணம் பறித்து வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக ஏமாற்றி பணம் பறித்து வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் காங்கேயம் சாலைக்கு அருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபருக்கு ஒருநாள் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலில் அதனை எடுக்க மறுத்த அந்த பெண், பிறகு பல முறை அதே இணைப்பில் இருந்து அழைப்பு வந்ததால் எடுத்துள்ளார். அப்போது அவரிடம் தொலைபேசியில்
 

பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக ஏமாற்றி பணம் பறித்து வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக ஏமாற்றி பணம் பறித்து வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் காங்கேயம் சாலைக்கு அருகில் உள்ள நல்லூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபருக்கு ஒருநாள் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. முதலில் அதனை எடுக்க மறுத்த அந்த பெண், பிறகு பல முறை அதே இணைப்பில் இருந்து அழைப்பு வந்ததால் எடுத்துள்ளார்.

அப்போது அவரிடம் தொலைபேசியில் பேசிய ஒருவர் என்னிடம் உங்களுடைய ஆபாச புகைப்படங்கள் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். மறுபடியும் அதே இணைப்பிற்கு அழைப்பு வந்தது. அந்த நபர் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். மேலும் கொடுக்க மறுத்தால் இந்த புகைப்படங்கள் முகநூலில் வெளியிடப்படும் என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த நபரை கண்டுப்பிடிக்க போலீஸார் தனிப்படை ஒன்றை அமைத்துத் தேடி வந்தது. 

பின்னர் ஒரு வழியாக அந்த நபரை கண்டுப்பிடித்துக் கைது செய்தனர். அவரது பெயர் ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சேலத்தைச் சேர்ந்த பல பெண்களை மிரட்டி பணம் வசூலித்திருப்பது  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ் புக்கில் தங்களது மொபைல் எண்களை பதிவிடுவதால் இது போன்ற சிக்கல்களில் பெண்கள் மாட்டிக் கொள்வது  வருதத்தை ஏற்படுத்துகிறது.