×

“ஆன் லைனில் பழகி ஆண் குழந்தை பெற்றார்”ஊடகத்தில் உருவான காதல் கர்ப்பத்தில் முடிந்தது

ஒரு 16 வயது பெண் சமூக ஊடகத்தில் பழகிய ஒரு 18 வயது வாலிபரால் கெடுக்கப்பட்டு ,இப்போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும் மகாராஷ்டிராவின் மும்பையில் ஒரு 16 வயது பெண் எந்நேரமும் ஆன்லைனிலேயே இருப்பார் ,அவரோடு எந்நேரமும் பேஸ் புக்கில் ஒரு வாலிபர் பேசிக்கொண்டேயிருப்பார் .இவரும் நேரம் காலம் தெரியாமல் அந்த 18 வயது வாலிபருடன் ஊடகத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருப்பார் .நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாறியது .இருவரும்
 

ஒரு 16 வயது பெண் சமூக ஊடகத்தில் பழகிய ஒரு 18 வயது வாலிபரால் கெடுக்கப்பட்டு ,இப்போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும்


மகாராஷ்டிராவின் மும்பையில் ஒரு 16 வயது பெண் எந்நேரமும் ஆன்லைனிலேயே இருப்பார் ,அவரோடு எந்நேரமும் பேஸ் புக்கில் ஒரு வாலிபர் பேசிக்கொண்டேயிருப்பார் .இவரும் நேரம் காலம் தெரியாமல் அந்த 18 வயது வாலிபருடன் ஊடகத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருப்பார் .
நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாறியது .இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க ஆசைப்பட்டனர் .அதனால் அந்த வாலிபர் அந்த 16 வயது பெண்ணை தன்னுடைய வீட்டில் யாருமில்லையென்று கூறி வரவைத்தார் ,அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவரின் வீட்டிற்கு சென்றார் .பிறகு இருவரும் உறவு கொண்டார்கள் .பிறகு அந்த பெண் அவரிடமிருந்து விடைபெற்று கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார் .
மூன்று மாதம் கழித்து அந்த பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் உருவானது ,ஆம் அந்த பெண் அந்த ஊடக வாலிபருடன் உறவு கொண்டதால் அவர் கார்ப்பமானார் .பிறகு டாக்டரிடம் சென்று சோதனை செய்தபோது நிலைமை கை மீறி போய் விட்டதென்றும் , இனி கர்ப்பத்தை கலைக்க முடியாதென்றும் கூறியதால் ஓராண்டுக்கு பிறகு இந்த பெண் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் .இப்போது அந்த குழந்தையின் தந்தையை ஆன்லைனில் அந்த பெண் தேடிக்கொண்டிருக்கிறார்,இந்த விவகாரம் அவருக்கு பிரசவம் பார்த்த நர்சிங் ஹோம் மூலம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் .