×

மனைவியின் மகப்பேறு : இ-பாஸ் கிடைக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து ரோஜா கர்ப்பமான நிலையில் மகப்பேறுக்காக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த ஓரிரு நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் வாய்ப்பு உள்ளதாக தொலைபேசியில் ரோஜா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் தனது கணவரை சென்னைக்கு வருமாறு ரோஜா அழைத்ததாக தெரிகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன்
 

காஞ்சிபுரம் மாவட்டம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த ரோஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு காஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து ரோஜா கர்ப்பமான நிலையில் மகப்பேறுக்காக சென்னை வந்துள்ளார். சென்னை வந்த ஓரிரு நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் வாய்ப்பு உள்ளதாக தொலைபேசியில் ரோஜா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் தனது கணவரை சென்னைக்கு வருமாறு ரோஜா அழைத்ததாக தெரிகிறது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விக்னேஸ்வரன் சென்னைக்கு செல்ல இ-பாஸ் பதிவு செய்து பலமுறை அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த விக்னேஸ்வரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது நண்பர் விக்னேஸ்வரனை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது அவர் தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு அவர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.