×

சம்பளம் கேட்ட பெண்ணை கொடூரமாக கொன்ற அரக்கர்கள்… சித்ரவதை செய்து கொலை செய்த கொடூர கும்பல்!

விசாகப்பட்டினத்தில் பாலியல் தொழில் பார்த்து வந்த 20 வயது பெண் பணியமர்த்தபட்டவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரவுலபாலம் நகரத்தைச் சேர்ந்த அந்தப் பெண், விசாகப்பட்டினத்தில் ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனது முதலாளியிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான வசந்தா என்பவர் அந்தப் பெண்ணின் சம்பளத்தில் பெரும்பகுதியை
 

விசாகப்பட்டினத்தில் பாலியல் தொழில் பார்த்து வந்த 20 வயது பெண் பணியமர்த்தபட்டவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரவுலபாலம் நகரத்தைச் சேர்ந்த அந்தப் பெண், விசாகப்பட்டினத்தில் ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனது முதலாளியிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான வசந்தா என்பவர் அந்தப் பெண்ணின் சம்பளத்தில் பெரும்பகுதியை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். அதனால், தான் அங்கிருந்து வெளியேறப்போவதாகக் கூறியுள்ளார். பின்னர் வசந்தா மற்றும் பிற அடியாட்களால் அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் சூடான இருப்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக கண் இமைகள் எடுக்கப்பட்டு, தலைமுடியையும் சவரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக, பாலியல் வேலை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வசந்தா, அவரது சகோதரி மஞ்சு மற்றும் தாய் தனலட்சுமி, அவரது கூட்டாளியான சஞ்சய், குமாரி அல்லது கீதா ஆகிய 6 நபர்களையும் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.