×

68 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் : சென்னையில் நேர்ந்த பயங்கரம்

சென்னை திருவொற்றியூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த சடலத்தை கண்டு அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில். இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில்
 

சென்னை திருவொற்றியூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்த சடலத்தை கண்டு அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில். இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனஅப்போது கண்காணிப்பு கேமராவில் கண்டெய்னர் லாரியில் ஒரு நபர் வேகமாக ஏறி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(32) என்பது தெரியவந்தது .

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயக்குமார் மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் அங்கு இருந்த மூதாட்டி கிருஷ்ணவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் உடல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் மூதாட்டி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மூதாட்டி அவரிடம் இருந்து தப்பி, எழுந்து ஓடிய போது அங்கிருந்த கட்டையை எடுத்து மூதாட்டியை ஜெயக்குமார் தாக்கியுள்ளார். அத்துடன் மூதாட்டி உயிருடன் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த ஜெயக்குமார் , அருகில் இருந்த கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது அவர் அளித்த வாக்குமூலத்தில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.