×

“கணவன் கூப்பிட்டா கண்டபடி வரணுமா?” -டாக்டரின் டார்ச்சர் தாங்க முடியாத பெண் பண்ண வேலை .

ஒரு டாக்டரின் பாலியல் தொல்லை தாங்க முடியாத வேதனையில் அவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார் . குஜராத்தின் அகமதாபாத்தில் 39 வயதான பெண் ஹர்ஷா படேல் என்பவர் அகமதாபாத்தில் உள்ள காட்லோடியா பகுதியில் வசிக்கும் டாக்டர் ஹிதேந்திர படேல் என்பவரை கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் .இருவரும் ஒரு திருமண வெப் சைட் மூலம் நட்பு கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள் .அதன் பிறகு அந்த டாக்டர் கணவனால் அந்த பெண் பலமுறை
 


ஒரு டாக்டரின் பாலியல் தொல்லை தாங்க முடியாத வேதனையில் அவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டார் .


குஜராத்தின் அகமதாபாத்தில் 39 வயதான பெண் ஹர்ஷா படேல் என்பவர் அகமதாபாத்தில் உள்ள காட்லோடியா பகுதியில் வசிக்கும் டாக்டர் ஹிதேந்திர படேல் என்பவரை கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் .இருவரும் ஒரு திருமண வெப் சைட் மூலம் நட்பு கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள் .அதன் பிறகு அந்த டாக்டர் கணவனால் அந்த பெண் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் .அந்த டாக்டர் அந்த பெண்ணை இயற்கைக்கு மாறான வகையில் உறவு கொள்ள வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார் .மேலும் அந்த டாக்டர் வரதட்சணை கொடுமையும் செய்துள்ளார்
இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது .அதன் பிறகு அந்த பெண் அவரிடம் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார் . .அதன் பிறகு அந்த டாக டர் சமாதானம் செய்து அவரின் மனைவியை வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். அதன் பிறகும் அந்த டாக்டர் இதேபோல அவரின் மனைவியை பாலியல் டார்ச்சர் செய்துள்ளார் .அதனால் அ ந்த பெண் ஹர்ஷா கடந்த வாரம் அந்த டாக்டரின் வீட்டினருகே தற்கொலை செய்து கொண்டார் ,இது பற்றி கேள்விப்பட்ட பொலிஸார் அந்த பெண்னின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாவிட்டு ,அவர் எழுதி வைத்திருந்த 18 பக்க தற்கொலை குறிப்பை கைப்பற்றினார்கள் .அப்போது அந்த குறிப்பில் அந்த பெண் தான் மிகவும் அந்த டாக்டரால் இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் டார்ச்சருக்கு ஆளானதால் தற்கொலை முடிவு எடுப்பதாக குறிப்பிட்டார் .போலிஸார் அந்த டாக்டர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

rep image