×

"டேய் எனக்கு 60,உனக்கு 20 ,இது நியாயமா?" -பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் செஞ்ச வேலை 

 

ஒரு ஹோட்டலில் பணியாற்றிய 60 வயதான பெண்ணை 20 வயதான வாலிபர் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டார் 


ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டிகா மாவட்டம் ஹூர்டாவில் திகேஷ்வர் ஹஜம் என்ற 20 வயதான வாலிபர் வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்தார் .அவருக்கு நிறைய ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கமிருந்தது .அதனால் அந்த படங்களை பார்த்து விட்டு அது போலிருக்க ஆசைப்பட்டு பல இடங்களில் பெண் தேடி அலைந்தார்  .ஆனால் எங்கும் கிடைக்காத விரக்தியில் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார் 
அப்போது  அந்த  ஓட்டலில் 60 வயது நிரம்பிய பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்பெண்ணை பார்த்ததும் அவருடன் தன் ஆசையை தீர்த்து கொள்ள முடிவு செய்தார் .அதனால் அவர்  தனியாக இருந்த போது அந்த வாலிபர் திகேஷ்வர் ஹஜம் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அந்த பெண் எனக்கு 60 வயசாகுது என்கிட்ட இப்படி நடந்துக்கிரியே என்று அழுதார்  .பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை தீவிரமாக தேடிவந்தனர்.
பிறகு போலீசாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய அந்த திகேஷ்வர் ஹஜம் ஜார்க்கண்டில் இருந்து தப்பித்து ,ஒடிசா வழியாக டெல்லி செல்ல முயற்சித்த போது அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திகேஷ்வரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து திகேஷ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்