×

"போதை பொருளை 'அங்க' வச்சி ,கப்பலில் தங்க வச்சி" -ஷாருக்கான் மகன் போதை கப்பலில் சிக்கிய பெண்

 

கப்பலில் போதை விருந்து நடந்தது தொடர்பாக கைதான பெண்ணொருவர் போதை பொருட்களை சானிடரி நாப்கினில் மறைத்து கடத்தியது தெரியவந்துள்ளது.


பாலிவுட் நடிகர்  நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட திரைதுறையை சேர்ந்த மாடல் அழகிகள் சமீபத்தில் ஒரு சொகுசு கப்பலில் போதை பொருள்களுடன் சிக்கினர் 
மும்பையில் இருந்து கோவா செல்லும் இந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போதை பொருள்தடுப்பு பிரிவினர் சாதாரண பயணிகளை போல் அந்த கப்பலில் அவர்களுடன் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது  தடை செய்யப்பட்ட போதை பொருள்களை அந்த திரை பிரபலங்கள் பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த ஷாருக்கான் மகன் உள்பட 8 பேரை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்
இதனையடுத்து மும்பையின் பல பகுதியில் போதை பொருள்தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு பெண் போதை மருந்துகளை சானிடரி நாப்கினில் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
அதன்படி நாப்கினில் மறைத்து வைத்தபடி போதை மருந்துகளை கப்பலுக்குள் அவர் கொண்டு வந்திருக்கிறார்.இந்த தகவல் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .மேற்கொண்டு பல பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது