×

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை அடைத்து வைத்த கொடுமை செய்த கொடூரம்!

சென்னை தி.நகர் நியூ கிரி சாலையில் wgm பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜோ. இவர் மேட்ரிமோனியின் மூலம் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நித்யாவிடம் தொலைபேசியில் பேசி பழகிய ஜோ, அவரை தனது அலுவலகத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளார். இதனால் சென்னைக்கு கிளம்பி வந்த அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோ கம்பெனியில் பணிபுரிந்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இதையடுத்து நிறுவனம் திடீரென
 

சென்னை தி.நகர் நியூ கிரி சாலையில் wgm பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜோ. இவர் மேட்ரிமோனியின் மூலம் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நித்யாவிடம் தொலைபேசியில் பேசி பழகிய ஜோ, அவரை தனது அலுவலகத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்துள்ளார். இதனால் சென்னைக்கு கிளம்பி வந்த அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜோ கம்பெனியில் பணிபுரிந்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இதையடுத்து நிறுவனம் திடீரென நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் பெங்களூர் காதலியிடம் உன் வீட்டில் 96 லட்சம் பணம் வாங்கிக்கொடு என மிரட்டி வந்துள்ளார் ஜோ.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அலுலகத்தை விட்டு செல்ல முடியும் என்று நித்யாவை அடைத்துவைத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் அமெண்டா, சாண்டி ஆகியோர் அடித்தும், உணவு தராமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூர் பெண்ணின் தந்தை சென்னையில் உள்ள உறவினரிடம் இதுகுறித்து சொல்ல அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.