×

“உன்னை காதலிச்ச பொண்ணை இப்படி பண்ணிட்டியே..” -ஊர்மக்களிடம் சிக்கிய காதலனுக்கு ஏற்பட்ட கதி.

பெற்றோர் தன்னுடைய காதலை ஏற்காததில் வருத்தமடைந்த ஒரு பெண் கிணற்றில் சடலமாக மிதந்ததால் அவரின் காதலனை ஊர்மக்கள் தாக்கினார்கள். குஜராத்தின் அரவள்ளி மாவட்டத்தில் பாகியா நா முவாடா கிராமத்தில் வசிக்கும் சோலங்கி என்ற 20 வயதான பெண் அந்த ஊரை சேர்ந்த சவாண் என்ற 25 வயதான வாலிபரை காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த சோலங்கியின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரிந்தது .அதனால் அந்த பெண்ணை அவர்கள் அந்த வாலிபரோடு பேசக்கூடாது என்று கண்டித்தார்கள் .
 

பெற்றோர் தன்னுடைய காதலை ஏற்காததில் வருத்தமடைந்த ஒரு பெண் கிணற்றில் சடலமாக மிதந்ததால் அவரின் காதலனை ஊர்மக்கள் தாக்கினார்கள்.

குஜராத்தின் அரவள்ளி மாவட்டத்தில் பாகியா நா முவாடா கிராமத்தில் வசிக்கும் சோலங்கி என்ற 20 வயதான பெண் அந்த ஊரை சேர்ந்த சவாண் என்ற 25 வயதான வாலிபரை காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த சோலங்கியின் காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரிந்தது .அதனால் அந்த பெண்ணை  அவர்கள் அந்த வாலிபரோடு பேசக்கூடாது என்று கண்டித்தார்கள் .

அதன் பின்னர் அந்த பெண் சோலங்கிக்கு அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிளையை பார்த்து நிச்சயம் செய்தார்கள் .ஆனால் அந்த பெண் சோலங்கிக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை .மேலும் தன்னுடைய காதலன் சவானை திருமணம் செய்து கொள்ள  விருமபினார் .அதனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று   தன்னுடைய காதலனை பார்க்க சென்று விட்டார் .அதன் பிறகு அந்த பெண் திடீரென அந்த ஊரில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தார் ,அதனால் அந்த  பெண்ணின் பெற்றோர்கள் அந்த பெண்ணை அவரின் காதலன் சவாண்தான் கொன்றதாக சந்தேகப்பட்டு போலீசில் அவர் மீது புகாரளித்தார்கள் .

ஆனால் போலீஸ் வருவதற்க்குள் அந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி இறந்த பெண்ணின் காதலன் சவானை கட்டி வைத்து தாக்க தொடங்கினார்கள் . இந்த விஷயத்தை கேள்விப்பட்டு போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள் .அதன் பிறகு துப்பாக்கி சூடு நடத்தி ஊர் மக்களிடமிருந்து அந்த காதலன் சவானை  மீட்டு அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .பின்னர் போலீசார் இறந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .