×

“துட்டுக்கு நீ ,பெட்டுக்கு அவன்” -கள்ளகாதலியால் தொழிலதிபரின் நிலையை பாருங்க

ஒரு தொழிலதிபரை அவரின் கள்ள காதலியும் அவரின் தாயாரும் சேர்ந்து கொலை செய்து பிணத்தை வெளியூரில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . டெல்லியில் நீரஜ் குப்தா என்ற 46 வயது தொழிலதிபர் தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பைசல் என்ற பெண்ணோடு கள்ள காதல் கொண்டு ஊர் சுற்றி வந்தார் .அந்த இளம் பெண் அவரோடு பல இடங்களுக்கு சுற்றி அவரின் பர்ஸை காலி செய்து வந்தார் .இந்நிலையில் அந்த தொழிலதிபர் அந்த காதலி பைசலை திருமணம்
 

ஒரு தொழிலதிபரை அவரின் கள்ள காதலியும் அவரின் தாயாரும் சேர்ந்து கொலை செய்து பிணத்தை வெளியூரில் வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

டெல்லியில் நீரஜ் குப்தா என்ற 46 வயது தொழிலதிபர் தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பைசல் என்ற பெண்ணோடு கள்ள காதல் கொண்டு ஊர் சுற்றி வந்தார் .அந்த இளம் பெண் அவரோடு பல இடங்களுக்கு சுற்றி அவரின் பர்ஸை காலி செய்து வந்தார் .இந்நிலையில் அந்த தொழிலதிபர் அந்த காதலி பைசலை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் .ஆனால் அந்த பெண் அவரின் வயதை காரணம் காமித்து அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தார் .வேண்டுமானால் இப்படியே கள்ள காதல் செய்து கொண்டு காலத்தை கழிக்கலாம் என்று கூறியுள்ளார் .
இதனால் அந்த தொழிலதிபர் மனம் நொந்த நிலையிலிருந்தார் .இதற்கிடையே அந்த பெண் பைசலுக்கு திடீரென வேறு ஒரு இளம் வாலிபருடன் கல்யாணம் செய்து கொள்ள அவரின் தாயார் நிச்சயம் செய்துள்ளார் .இதை கேள்விப்பட்ட அந்த நீரஜ் நேராக தன்னுடைய காதலி பைசல் வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார் .அப்போது நடந்த வாக்கு வாதத்தில் அந்த நீரஜை அந்த காதலியும் ,அவரின் தாயாரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார்கள் .பின்னர் அவரின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் குஜராத்தில் கொண்டு வந்து அப்புறப்படுத்தியுள்ளார்கள் .இந்த நிலையில் தன்னுடைய கணவரை காணாமல் திண்டாடிய அவரின் மனைவி போலீசில் புகாரளித்தார் .பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நீரஜின் காதலியும் அவரின் தாயாரும் அவரை கொன்று பிணத்தை குஜராத்தில் வீசிய விவரம் அறிந்துகொண்டார்கள் .பிறகு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .