×

பணப்பெட்டி போல் வீசப்பட்ட பிணப்பெட்டி -திருமணமான இளம்பெண்ணை துண்டு துண்டாக்கினர் – பணத்தைப்போல் அடுக்கி வைத்தனர் ..

நடுரோட்டில் ஒரு திருமணமான இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி .பணம் போல பிணத்தை பெட்டிக்குள் அடுக்கி வைத்து ,அந்த சூட் கேசை நடுரோட்டில் வீசி சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் பகுதியில் திங்கள் கிழமை காலையில் பேருந்து நிறுத்தம் அருகே காலை 8 மணியளவில் ஒரு பெட்டி அனாதையாக கிடந்தது . இந்த கொரானா பயம் காரணமாக யாரும் அந்த பெட்டியை திறந்து பார்க்க அஞ்சினர் .பலர் அந்த பெட்டியை கடந்து
 

நடுரோட்டில் ஒரு திருமணமான இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி .பணம் போல பிணத்தை பெட்டிக்குள் அடுக்கி வைத்து ,அந்த சூட் கேசை நடுரோட்டில் வீசி சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் பகுதியில் திங்கள் கிழமை காலையில் பேருந்து நிறுத்தம் அருகே காலை 8 மணியளவில் ஒரு பெட்டி அனாதையாக கிடந்தது . இந்த கொரானா பயம் காரணமாக யாரும் அந்த பெட்டியை திறந்து பார்க்க அஞ்சினர் .பலர் அந்த பெட்டியை கடந்து சென்றாலும் அதை பார்த்த படியே சென்றார்கள் .பலர் அதனருகில் கூட போக பயந்து வேறு வழியாக சென்றனர் .இன்னும் சிலர் அதற்குள் வெடிகுண்டு ஏதாவது இருக்குமோ என்று பேசிக்கொண்டு அதனருகில் கூட போகாமல் சென்றனர் .


ஒரு வேலை வெடிகுண்டு இருந்து வெடித்தால் அது அந்த பகுதி முழுவதும் உயிர் சேதத்தை உண்டாக்கி விடப்போகிறது என்று ஒருவர் போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் விரைந்து வந்து அந்த பெட்டியை வெகு ஜாக்கிரதையாக கைப்பற்றி திறந்து பார்த்தனர் .திறந்து பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது .ஆம் ,அந்த பெட்டிக்குள் ஒரு திருமணமான இளம் பெண்ணை யாரோ துண்டு துண்டாக வெட்டி ,கூறு போட்டு பணத்தை போல பிணத்தை அடுக்கி வைத்துள்ளனர் .அந்த பெட்டிக்குள் இருக்கும் அந்த பெண்ணின் பிணத்தை அந்த கோலத்தில் பார்த்த போலீஸாருக்கே மிக அதிர்ச்சியாக இருந்தது .உடனே போலீசார் அந்த பிணப்பெட்டியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .


இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து ,இறந்தவர் யார் ,எந்த ஊரை சேர்ந்தவர் ,எதனால் அவரை கொலை செய்து இப்படி பெட்டிக்குள் அடைத்து வீசி சென்றனர் .இதை செய்த நபர் ,ஒரு வேலை அவரை பலாத்காரம் செய்து கொன்றாரா ?இல்லையென்றால் குடும்ப தகராறால் கொல்லப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .