×

“உன் எச்சில் பட்ட இடத்திலெல்லாம் ஆசிட் பட்டுடுச்சே” -ஒரு பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த நிலை.

கிராமத்திற்கு குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தார்கள் . கிழக்கு டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 22 வயதான ஒரு பெண் ,மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் வசித்த ஒருவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிகளுக்கு இப்போது நாலு வயதில் ஒரு மகனிருக்கிறார் .இந்நிலையில் அந்த பெண் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் .ஆனால் அவரின்
 


கிராமத்திற்கு குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தார்கள் .


கிழக்கு டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 22 வயதான ஒரு பெண் ,மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் வசித்த ஒருவரை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிகளுக்கு இப்போது நாலு வயதில் ஒரு மகனிருக்கிறார் .இந்நிலையில் அந்த பெண் டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் .
ஆனால் அவரின் கணவர் கிரமத்தில் வசிக்கிறார் .அதனால் அந்த மனைவியை தன்னோடு கிராமத்திற்கு குடும்பம் நடத்த வருமாறு பலமுறை கூப்பிட்டார் ,ஆனால் அந்த பெண் கிராமத்திற்கு தன்னால் வரமுடியாது என்று கூறி விட்டார் .இதனால் அந்த கணவர் தன்னுடைய மகனை, மனைவியிடமிருந்து பிரித்து தன்னோடு கிராமத்தில் வசிக்க கூட்டி சென்று விட்டார் .அதனால் அவரின் மனைவி மட்டும் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டே அங்குள்ள தன்னுடைய பெற்றோரோடு வசித்து வந்தார் .
இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் கடந்த வாரம் அந்த மனைவிக்கு போன் செய்து, அவரிடம் பேசவேண்டும் அதனால் டெல்லியிலிருக்கும் அவரின் வீட்டிற்கு இரவு 9 மணியளவில் வருவதாக கூறி விட்டு சென்றார் .அப்போது கணவருக்காக கதவை திறந்த அந்த மனைவியின் முகத்தில் அந்த கணவர் ஆசிடை வீசிவிட்டு சென்று விட்டார் .இதனால் முகம் ,வாய் ,கண் போன்ற பகுதிகள் ஆசிடில் பொசுக்கப்பட்ட அந்த பெண் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது . பிறகு அந்த மனைவியின் மீது ஆசிடை வீசிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள் .