×

“ஆண் குழந்தை பொறக்கவே மாட்டேங்குதே அதனால ..”ஒரு தாய் செஞ்ச வேலைய பாருங்க.

தனக்கு தொடர்ந்து பெண் குழந்தையே பிறக்கிறதே ,ஆண் குழந்தை இல்லையே என்று ஏங்கிய ஒரு தாய் தனது மகள்களை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றார். ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் பிப்ரோலி கிராமத்தில் வசிக்கும் ஃபர்மீனா என்ற பெண் குர்ஷித் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அவரின் திருமணத்திற்கு பிறகுஅவர் நான்கு மகள்களை பெற்றெடுத்தார் .இப்போது அவர்களுக்கு ஆறு, நான்கு, மூன்று மற்றும் ஒரு வயது ஆகிறது .அதன் பிறகு அந்த பெண்
 


தனக்கு தொடர்ந்து பெண் குழந்தையே பிறக்கிறதே ,ஆண் குழந்தை இல்லையே என்று ஏங்கிய ஒரு தாய் தனது மகள்களை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றார்.


ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் பிப்ரோலி கிராமத்தில் வசிக்கும் ஃபர்மீனா என்ற பெண் குர்ஷித் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அவரின் திருமணத்திற்கு பிறகு
அவர் நான்கு மகள்களை பெற்றெடுத்தார் .இப்போது அவர்களுக்கு ஆறு, நான்கு, மூன்று மற்றும் ஒரு வயது ஆகிறது .அதன் பிறகு அந்த பெண் தனக்கு தொடர்ந்து தனக்கு பெண் குழந்தைகளே பிறந்ததே, ஒரு ஆண் குழந்தை கூட பிறக்கவில்லையே என்று ஏங்கினார் .
இதற்காக அவர் பல பூஜைகள் ,பரிகாரங்கள் செய்து வந்தார் .ஆனால் அவர் கடைசியாக சென்ற ஆண்டுகூட கர்ப்பமாக இருந்தார் .அப்போது கூட தனக்கு ஆண் குழந்தை பிறக்குமென்று ஆசையாக இருந்தார் .ஆனால் அடுத்ததும் பெண் குழந்தையே பிறந்ததால் அவர் ஏமாற்றமடைந்து மன சோர்வு அடைந்தார் .அப்போது முதல் தன்னுடைய கணவரிடம் தனக்கு ஒரு ஆண் வாரிசில்லையே என்று புலம்பியபடி இருந்தார் .
இந்நிலையில் அவரின் கணவர் குர்ஷித் வெளியூர் சென்றிருந்தார் .அப்போது அந்த பெண் தன்னுடைய நான்கு மகள்களையும் கழுத்தை நெரித்து ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்தார் .அதன் பிறகு அவரும் தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்று வீட்டில் மயங்கி கிடந்தார் .அதன் பிறகு வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்த கணவர் குர்ஷித் தன் மகள்கள் இறந்து கிடப்பதையும் அருகே மனைவியும் மயங்கி கிடப்பதையும் பார்த்து அவரை மறுத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .