×

ஏமாற்றிய காதலன் -பழிவாங்க துடித்த காதலி -சமூக ஊடகத்தில் நடந்த பலான வேலை அம்பலம்

முன்னாள் காதலனை பழி வாங்க துடித்த ஒரு பெண் அவரின் வருங்கால மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி ஊடகத்தில் விட்டார் . குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரோடாவில் வசிக்கும் ஒரு 23 பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணுடன் காதலை முறித்துக்கொண்டார் .ஆனால் அந்த பெண் அவரை கல்யாணம் செய்ய கேட்டபோது அவர்களுக்குள் சண்டை வந்து பிரிந்து விட்டனர் .இதனால் அந்த
 


முன்னாள் காதலனை பழி வாங்க துடித்த ஒரு பெண் அவரின் வருங்கால மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி ஊடகத்தில் விட்டார் .


குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரோடாவில் வசிக்கும் ஒரு 23 பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் .இந்நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணுடன் காதலை முறித்துக்கொண்டார் .ஆனால் அந்த பெண் அவரை கல்யாணம் செய்ய கேட்டபோது அவர்களுக்குள் சண்டை வந்து பிரிந்து விட்டனர் .இதனால் அந்த பெண் அவர் மீது கடுமையான் கோபத்திலிருந்தார் .
இதற்கிடையே அந்த வாலிபருக்கு வேறொரு இடத்தில ஒரு பெண்ணை பார்த்து அவரின் உறவினர்கள் திருமணம் நிச்சயம் செய்தனர் .அப்போது அந்த பெண்ணுக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது .அதனால் அவரின் முன்னாள் காதலனை அவர் பழிவாங்க துடித்தார் .அதனால் அவர் தன்னுடைய காதலனின் வருங்கால மனைவியின் போட்டோவை சமூக ஊடகத்திலிருந்து எடுத்தார் .பின்னர் அந்த போட்டோவை ஆபாசமாக மாற்றி அதை அந்த பெண்ணுக்கு அனுப்பினார் .
இதனால் அந்த பெண் தன்னுடைய வருங்கால கணவரிடம் இதை கூறினார் ,அதை பார்த்து அதிர்ந்த அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .போலீசார் சைபர் க்ரைம் போலீசில் உதவியுடன் அந்த பெண்ணை பற்றி விசாரித்தனர். அப்போது அந்த பெண் அவரின் காதலனின் பாஸ்வர்டு தெரிந்து கொண்டு அவரின் இன்ஸ்டாக்ராம் கணக்கில் நுழைந்து அந்த பெண்ணின் போட்டோவை எடுத்து இப்படி செய்தார் என்று கண்டு பிடித்தனர் .பின்னர் அந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் ,மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது