×

முதல் புருஷன் போயிட்டான் -அடுத்த புருஷன் தள்ளிட்டான் -விதவையின் வாழ்வில் வீசிய புயல்

ஒரு விதவையை குழந்தையுடன் சேர்த்து ஆற்றில் தள்ளி கொல்ல முயன்ற ஒரு காதலனை போலீசார் கைது செய்தார்கள் உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் சாய்ரா என்ற பெண் தன்னுடைய கணவர் ஷேக் அலி மற்றும் ஒரு குழந்தையோடு வசித்து வந்தார் .பிறகு அந்த பெண் இரண்டாவது குழந்தைக்காக மூன்று மாத கர்ப்பமா இருந்த போது அவரின் கணவர் ஒரு விபத்தில் இறந்தார் .அதன் பிறகு அந்த சாய்ரா, சோனு என்ற நபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து
 


ஒரு விதவையை குழந்தையுடன் சேர்த்து ஆற்றில் தள்ளி கொல்ல முயன்ற ஒரு காதலனை போலீசார் கைது செய்தார்கள்


உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் சாய்ரா என்ற பெண் தன்னுடைய கணவர் ஷேக் அலி மற்றும் ஒரு குழந்தையோடு வசித்து வந்தார் .பிறகு அந்த பெண் இரண்டாவது குழந்தைக்காக மூன்று மாத கர்ப்பமா இருந்த போது அவரின் கணவர் ஒரு விபத்தில் இறந்தார் .அதன் பிறகு அந்த சாய்ரா, சோனு என்ற நபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் .அப்போது தனது முதல் கணவரின் இரண்டாவது குழந்தையை பிரசவித்தார் .அதன் பிறகு சாய்ராவுக்கும் அவரின் காதலன் சோனுவுக்கும் அடிக்கடி முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள் விஷயமாக சண்டை வந்துள்ளது .
அதனால் கடந்த பிப்ரவரி 27ம் தேதியன்று இரவு 11 மணியளவில் சோனுவும் மற்றும் அவரின் உறவினர்கள் சிலரும் சேர்ந்து ,சய்ராவையும் அவரது குழந்தைகளையும் ஒரு காரில் ஏற்றிச் சென்றனர்.அதன் பின்னர் அவர்கள் அந்த சாய்ராவையும் ,அவரின் குழந்தைகளையும் அங்குள்ள ஒரு ஆற்றில் தூக்கி வீசினார்கள் .அதில் அந்த குழந்தைகள் இரண்டும் இறந்து போனார்கள் ,அந்த பெண் சாய்ரா மட்டும் உயிர் பிழைத்து மயக்க நிலையிலிருந்தார்
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சாயராவை மீட்டார் .பின்னர் அவர் மார்ச் 2 ம் தேதி குருகிராமிற்கு திரும்பினார். பின்னர் தனது குழந்தைகளைக் காணாத அந்தப் பெண் போலீஸ்காரர்களிடம் சென்று கெர்கி தவுலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி சோனுவையும் அவருக்கு உதவிய மூன்று உறவினர்கள் ரவிதா, பிரதீப் அல்லது கோலு மற்றும் சச்சின் ஆகியோரை கைது செய்தனர் .