×

"அடேய் ஆடம்பர காருக்காக இப்படி அடைச்சு வச்சி .."புகுந்த வீட்டு ஆண்களால் பெண்ணுக்கு நடந்த கொடுமை 

 


ஒரு பெண்ணிடம் ஆடம்பர காரை வரதட்சணையாக கேட்டு அடைத்து வைத்து அந்த குடும்பத்தினரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கொடுமை நடந்துள்ளது  


பஞ்சாப் மாநிலம் லூதியானவில் வசிக்கும் ஒரு பெண் 2003ம் ஆண்டு ஒரு திருமண தளத்தின் மூலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .அந்த பெண் திருமணத்தின் போது பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளை வரதட்சணையாக கொண்டு வந்தார் .ஆனால் அந்த புகுந்த வீட்டினர் அந்த பெண்ணிடம் மெர்சிடஸ் ஆடம்பர காரை வரதட்சணையாக கேட்டு கொடுமை செய்து  வந்தனர் .ஆனால் அந்த பெண் 50 லட்ச ரூபாய் பணம் தங்கள் வீட்டில் இல்லையென்று கூறி அந்த சொகுசு காரை வாங்கிக்கொடுக்காமல் வாழந்து வந்தார் .
இந்நிலையில் அந்த பெண்ணிடம் அந்த புகுந்த வீட்டிலிருந்த கணவர் .மாமனார் ,மச்சினர் அனைவரும் சேர்ந்து அந்த காரை கேட்டு அடித்து உதைத்து ஒரு அறைக்குள் கட்டி வைத்தனர் .
பின்னர் அவரை கடந்த வாரம் அவர்கள் அந்த பெண்ணை பாலியல் துஷ்ப்பிரயோகமும் செய்துள்ளார்கள் .இதனால் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்தார் .அதன்பிறகு அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பின்னர் போலீசார் தகவல் தெரிந்து கொண்டு ,அந்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்