×

"என்னை மாதிரியே என் நண்பனோடும்  உடலுறவுக்கு வா" -மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்  

 

இரு வாலிபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதால் கைது செய்யப்ட்டனர் 


ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள துக்கிராலா பிளாக்கில் ஒரு 40 வயதான பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடனும்  கணவரோடும் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் கடந்த ஒரு ஆண்டாக வெளியூரில் வேலை பார்ப்பதால் அந்த பெண் தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது .அதனால் அந்த பெண்ணுடன் அந்த வாலிபர் அடிக்கடி உல்லாசமாக இருந்து விட்டு போனார் .
இந்நிலையில் இந்த கள்ள உறவை தெரிந்து கொண்ட அதே ஊரை சேர்ந்த இன்னொரு வாலிபர் அந்த நண்பரிடம் அவரின் கள்ள காதலியுடன் உல்லாசமாக இருக்க தனக்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளார் .இல்லாவிடில் இந்த விஷயத்தை  அவரின் கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினார் .அதனால் சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபரை அவரின்  கள்ள காதலி வீட்டிற்கு அவர் கூட்டி சென்றார் .அப்போது அந்த வாலிபருடன் அந்த காதலியை உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார் .அதற்கு அந்த பெண் மறுத்ததும் இருவரும் அந்த  பெண்ணை பலாத்காரம் செய்து, கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் .பின்னர் இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து  அந்த இரு வாலிபரையும்கைது  செய்தனர்