×

“போதை கொடுத்து மயங்க செய்தான் ,ரெண்டு வருஷம் பெண்டு நிமித்தினான் ” -பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் நிலைமைய பாருங்க.

ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த வாலிபர் ,அப்பெண் போலீசுக்கு போனதால் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது . ஜெய்ப்பூரில் வசிக்கும் லெக் ராஜ் என்ற வாலிபர் அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகியுள்ளார் .அப்போது அந்த பெண் நட்பாக பழகியதை தப்பாக புரிந்து கொண்ட அந்த லெக்ராஜ் இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரின் வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது யாருமில்லாத தனிமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருக்கு போதை பொருள் கொடுத்து மயங்கியதும், அவரை
 

ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த வாலிபர் ,அப்பெண் போலீசுக்கு போனதால் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது .

ஜெய்ப்பூரில் வசிக்கும் லெக் ராஜ் என்ற வாலிபர் அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகியுள்ளார் .அப்போது அந்த பெண் நட்பாக பழகியதை தப்பாக புரிந்து கொண்ட அந்த லெக்ராஜ் இரண்டாண்டுகளுக்கு முன்பு அவரின் வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது யாருமில்லாத தனிமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவருக்கு போதை பொருள் கொடுத்து மயங்கியதும், அவரை பலாத்காரம் செய்துள்ளார் .பின்னர் அதை வீடியோவும் எடுத்துள்ளார் .அதன் பின்னர் அந்த வீடியோவை காமித்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .
அந்த பெண் அவர் கூப்பிட்டு வர மறுத்தால் அந்த வீடியோவை ஊடகத்தில் விடுவதாக மிரட்டியே இப்படி கொடுமை செய்துள்ளார் .அதனால் அந்த பெண் அவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸில் புகாரளித்துள்ளார் .அப்போது அவர் மீது கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது .ஆனால் அவர் தலைமறைவானதால் அவரை கைது செய்யவில்லை .இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளியன்று அந்த வாலிபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரை தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடி விட்டார் .போலீசார் அந்தப்பெண்ணை காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள் .மிகவும் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் .இப்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .மேலும் இந்த வழக்கில் லெக்ராஜ், அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது தந்தை கன்ஹையா லால் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.