×

“என் புருஷன் செத்துட்டாங்கிற சேதி என் காதுல கேக்கணும்” -ஒரு தர்மபத்தினியின் தரங்கெட்ட செயல்

ஒரு மனைவியின் கள்ளகாதல் கணவனுக்கு தெரிந்து விட்டதால், அவர் தனது கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் . உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பவன் என்ற கணவனும் , சோதி என்ற மனைவியும் வாழ்ந்து வந்தார்கள் .இந்நிலையில் சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் இல்லற வாழ்வில் அந்த மனைவிக்கு ஏற்பட்ட கள்ள காதலால் அவர்களின் சந்தோஷம் பறி போனது .அந்த பெண்ணுக்கு பிரமத் என்ற அவரின் கணவரின் நண்பரோடு தொடர்பு ஏற்பட்டது .நாளடைவில் அவர்களிருவரும் அந்த பெண்ணின்
 


ஒரு மனைவியின் கள்ளகாதல் கணவனுக்கு தெரிந்து விட்டதால், அவர் தனது கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் .


உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் பவன் என்ற கணவனும் , சோதி என்ற மனைவியும் வாழ்ந்து வந்தார்கள் .இந்நிலையில் சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் இல்லற வாழ்வில் அந்த மனைவிக்கு ஏற்பட்ட கள்ள காதலால் அவர்களின் சந்தோஷம் பறி போனது .
அந்த பெண்ணுக்கு பிரமத் என்ற அவரின் கணவரின் நண்பரோடு தொடர்பு ஏற்பட்டது .நாளடைவில் அவர்களிருவரும் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியாமல் ஒன்றாக சுற்றி வந்தார்கள் .இதற்கிடையே அந்த மனைவியின் கள்ள காதல் விவகாரம் அந்த கணவன் பவனுக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அவர் அவரின் மனைவியை கண்டித்தார் .இதனால் அவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .
இதனால் மிகவும் கவலை பட்ட அந்த சோதி அவரின் கணவன் உயிரோடு இருந்தால் தான் தன்னுடைய காதலை தொடர முடியாது என்று முடிவெடுத்தார் .அதனால் இதற்கு தனது கணவரை தீர்த்து கட்டுவது ஒன்றே சிறந்து வழி என்று முடிவு செய்தார் .அதனால் தன்னுடைய காதலன் பிரமத் உடன் சேர்ந்து அவரை கொல்ல முடிவெடுத்தார் .
அதனால் கடந்த வியாழக்கிழமையன்று அவரின் காதலன் பிரமாத் மற்றும் அவரின் நண்பர் பங்கஜ் ஆகிய இருவரையும் கூப்பிட்டு தன்னுடையு கணவரை அன்று இரவே கொலை செய்ய சொன்னார் .பின்னர் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்று தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார் .
இதனால் வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணின் கணவர் பவனுக்கு மது போதை ஏற்றி விட்டு அவரின் கழுத்தை நெரித்து இருவரும் கொன்றனர் .பிறகு அவரின் உடல் மசூரியில் உள்ள கங்கா கால்வாயில் கொட்டப்பட்டது.
பிறகு இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இறந்த பவனின் மனைவி மற்றும் காதலன் ஆகியோரை கைது செய்தார்கள் .