×

“காதலிக்கு துண்டாச்சி ,காதல் ரெண்டாச்சி “-காதல் எதிர்ப்பால் வந்த விளைவு

வீட்டை எதிர்த்து காதலித்த ஒரு காதல் ஜோடியின் விரல்களை வெட்டி வீசிய உறவினரின் செய்கையால் காதலர்கள் நிலைகுலைந்து போயினர். கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 20 வயது பெண்ணும் சத்யா (28) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து உள்ளனர். இந்நிலையில் தனக்ஷ்மியின் பெற்றோரின் சம்மதத்தை வாங்கி கொண்டு அந்த காதலன் சத்யா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பெற்றோர் இவர்களின்
 


வீட்டை எதிர்த்து காதலித்த ஒரு காதல் ஜோடியின் விரல்களை வெட்டி வீசிய உறவினரின் செய்கையால் காதலர்கள் நிலைகுலைந்து போயினர்.

கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் தாலுகாவின் பி.ஜி.பல்யா கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 20 வயது பெண்ணும் சத்யா (28) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து உள்ளனர். இந்நிலையில் தனக்ஷ்மியின் பெற்றோரின் சம்மதத்தை வாங்கி கொண்டு அந்த காதலன் சத்யா அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பெற்றோர் இவர்களின் காதலை கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால் காதலி தனலட்சுமியும் காதலன் சத்யாவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ,எப்படியாவது கல்யாணம் செய்ய முடிவு செய்து, டிசம்பர் 7 ஆம் தேதி திருமணத்திற்கான தேதியை நிர்ணயித்தார்கள்

இதை கேள்விப்பட்ட தனலட்சுமியின் தந்தை சிவசாமியும் அவரது சகோதரர் மகேந்திராவும் ஒரு மருந்து கடைக்கு அருகே சனிக்கிழமை அவரிடம் சண்டை போட்டார்கள் , பின்னர் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வாக்குவாதம் சூடுபிடித்து, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நிலையில், அந்த பெண்ணின் தந்தையும் சகோதரனும் அவரைப் பிடித்து அவரின் விரல்களை வெட்டினார்கள்.இந்த தாக்குதலில் விரல்களை இழந்த அந்த பெண் வலியால் துடித்து சாலையில் மயங்கி விழுந்தார் .போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தார்கள் .அதன்பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .