×

ஆபாச படத்தை வெளியிட்ட மனைவி -அதிர்ந்து போன கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?

ஒரு பெண் தன்னுடைய கணவர் மீதுள்ள கோபத்தில் அவரின் ஆபாச படங்களை சமூக ஊடக கணக்கில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார் குஜராத் மாநிலம் சூரத்தில் 29 வயதான முதுகலை பட்டம் பெற்ற பெண்ணொருவர் ,கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜவுளி தொழிலதிபரை மணந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கும் அந்த கணவருக்கும் அடிக்கடி சண்டை வர தொடங்கியது .இதனால் அந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து வாழ தொடங்கினர் . அதன் பிறகு அந்த
 

ஒரு பெண் தன்னுடைய கணவர் மீதுள்ள கோபத்தில் அவரின் ஆபாச படங்களை சமூக ஊடக கணக்கில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்

குஜராத் மாநிலம் சூரத்தில் 29 வயதான முதுகலை பட்டம் பெற்ற பெண்ணொருவர் ,கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜவுளி தொழிலதிபரை மணந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கும் அந்த கணவருக்கும் அடிக்கடி சண்டை வர தொடங்கியது .இதனால் அந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து வாழ தொடங்கினர் .

அதன் பிறகு அந்த பெண்,தனது  கணவர் மீது கடும் கோபத்தில் இருந்தார் .அதனால் கணவரை பழி வாங்க துடித்தார் .அதனால் சமூக ஊடகத்தில் அவர் பெயரில் போலியாக ஒரு கணக்கை உருவாக்கினார் .அந்த போலியான கணக்கில் அவர் அந்த கணவரின் ஆபாச படங்களை வெளியிட்டார் .அவர் அந்த படங்களை அவரின் கணவரோடு வாழும்போதே எடுத்து  வைத்திருந்தார் .

அதன் பிறகு அந்த பெண்னின் கணவர் அந்த ஊடக கணக்கில் தன்னுடைய ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .அதனால் அவர் இந்த வேலையை செய்தது தன்னுடைய பிரிந்து போன மனைவி செய்த வேலைதான் என்று தெரிந்து கொண்டார் .அதனால் மே 22 அன்று அங்குள்ள சைபர் க்ரைம் போலிசில் அவர் மீது புகார் கொடுத்தார் .அந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து ,தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் .அதன் பிறகு அந்த படங்களை வெளியிட்ட பெண்ணை கைது செய்தனர் .