×

40000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளம் பெண் -500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமி -வறுமையின் கொடுமை .

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணை விலைக்கு வாங்கி,அவரின் மகளை விற்ற மோசடி நபரிடமிருந்து அந்த பெண்களை போலீசார் மீட்டனர் . பஞ்சாபில் ஜஸ்ஸா சிங் என்பவர் தன் மனைவி ராஜ்வீர் கவுர் மற்றும் தன்னுடைய இரண்டு மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ,அந்த பெண் அவரை விட்டு பிரிந்தார் .அப்போது அவரின் ஆறு வயதான மகளை தன்னோடு அழைத்து கொண்டு வந்து விட்டார் .இந்நிலையில் அந்த பெண்ணை
 


வீட்டை விட்டு ஓடி வந்த பெண்ணை விலைக்கு வாங்கி,அவரின் மகளை விற்ற மோசடி நபரிடமிருந்து அந்த பெண்களை போலீசார் மீட்டனர் .


பஞ்சாபில் ஜஸ்ஸா சிங் என்பவர் தன் மனைவி ராஜ்வீர் கவுர் மற்றும் தன்னுடைய இரண்டு மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ,அந்த பெண் அவரை விட்டு பிரிந்தார் .அப்போது அவரின் ஆறு வயதான மகளை தன்னோடு அழைத்து கொண்டு வந்து விட்டார் .இந்நிலையில் அந்த பெண்ணை ஒருவர் பார்த்து அவரை காப்பாற்றுவதாக கூட்டி சென்றார் .பிறகு
மதுராவின் ஃபரா பகுதியில் வசிக்கும் ராஜ்வீர் கவுர் என்ற ஒருவருக்கு அந்த பெண்ணை 40000 ரூபாய்க்கு அவர் விற்று விட்டார் .அதன் பிறகு அந்த பெண் அவரின் மகளோடு இருப்பதை பார்த்த அந்த ராஜ்வீர் கவுர், அந்த சிறுமியை வெறும் 500 ரூபாய்க்கு வேறொரு நபரிடம் விற்று விட்டார் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் 1098 என்ற பெண்கள் உதவி மைய போலீசில் கூறினார் .
இந்த விஷயத்தையறிந்த போலீசார் அந்த பெண்ணிருக்கும் இடத்திற்கு சென்றனர் .பிறகு போலீசார் அந்த சிறுமியை வாங்கிய நபரிடமிருந்து மீட்டு அங்குள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விட்டனர் .பின்னர் அந்த பெண்ணை 40000 ரூபாய்க்கு வாங்கிய நபரிடமிருந்து மீட்டு அவரின் கணவரிடம் ஒப்படைத்தனர் .