×

ஓடிப்போன கணவன் -தேடிப்போன மனைவி -கேடித்தனம் செஞ்ச மந்திரவாதி

ஒரு பெண்ணின் காணாமல் போன கணவனை தேடி கொடுப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்த ஒரு மந்திரவாதியால் அந்த பெண் தற்கொலை முயற்சி செய்தார். அகமதாபாத்தில் உள்ள வடாஜ் பகுதியில் வசிக்கும் 29 வயதான பெண் பார்மசிஸ்ட் ஒருவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல் போனார் .அதனால் அந்த பெண் தனது கணவரை பல இடங்களில் தேடினார் .ஆனால் அவரின் கணவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை .அதனால் அவர் அதே பகுதியில் வசிக்கும்
 

ஒரு பெண்ணின் காணாமல் போன கணவனை தேடி கொடுப்பதாக கூறி அவரை பலாத்காரம் செய்த  ஒரு மந்திரவாதியால் அந்த பெண் தற்கொலை  முயற்சி செய்தார்.

அகமதாபாத்தில் உள்ள வடாஜ் பகுதியில் வசிக்கும் 29 வயதான பெண் பார்மசிஸ்ட் ஒருவரின் கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல் போனார் .அதனால் அந்த பெண் தனது கணவரை பல இடங்களில் தேடினார் .ஆனால் அவரின் கணவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை .அதனால் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த் வகேலா என்ற மாந்த்ரீகம் செய்பவரை தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை தேடி கொடுக்குமாறு கேட்டார் ,அதை கேட்ட அந்த வகேலா தன்னுடைய மந்திர சக்தியால் அவரின் கணவர் இருக்குமிடத்தை கண்டு பிடித்து கொடுப்பதாக கூறினார் .

அதை  உண்மையென்று நம்பிய அந்த பெண் அவர் சொன்ன வேலையெல்லாம் செய்தார் .அந்த மந்திரவாதி அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார் .அப்போது அவர் அந்த பெண்ணை  பலமுறை பாலியல்  பலாத்காரம் செய்தார் .மேலும் அந்த காட்சியை படமெடுத்து,அதை பலரிடம்  காண்பிப்பேன் என்று கூறிஅந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார்.மேலும்  அந்த பெண்ணிடம்  அவர்  கிட்டத்தட்ட 2.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார் .

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று அந்த பெண் கூறிவிட்டு ,அவரை தவிர்க்க தொடங்கினார் .இதனால் கோபப்பட அந்த வகேலா அந்த பெண்னின் அந்தரங்க வீடியோவை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டினார் .இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமையன்று தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் .பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து   விசாரித்து வருகின்றனர்