“குடும்பத்தை கொன்ற குடி பழக்கம் “போதையில் புத்தி தடுமாறி சுத்தி எடுத்தார் – மனைவி ,குழந்தைகளை கொலை செய்தார்..
டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் ஷிவ் பிளாட்டில் உள்ள ஒரு வீட்டில் ப்ரீத்தி என்ற மனைவியோடு சுகன் என்ற கணவர் இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்தார் .அப்போது சுகனுக்கு திடீரென போதை பழக்கம் தொற்றிக்கொண்டது .இதனால் எந்த வேலைக்கும் போகாமல் எந்நேரமும் குடிபோதையில் இருந்தார் ,இதனால் கணவன் ,மனைவிக்குள் எப்போதும் சண்டை வந்துகொண்டே இருந்தது .
இந்நிலையில் நேற்று இரவு ப்ரீத்திக்கும் அவரின் கணவர் சுகனுக்கும் வழக்கம் போல சண்டை வந்துள்ளது .அப்போது சுகன் குடிபோதையில் இருந்துள்ளார் .அந்த குடும்ப சண்டை முற்றிப்போன பிறகு போதையிலிருந்த சுகன் அவரின் மனைவி ப்ரீத்தி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார் .