×

"என்னங்க எவனோ ரெண்டு பேர் என்னை கெடுக்கிறானுங்க" -நள்ளிரவில் போனில் அலறிய பெண் -அடுத்து நடந்த சோகம் 

 


தனியாக வந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்து கத்தியால் குத்திய நபர்களை போலிசார்  கைது செய்தனர் 


ஹரியானா மாநிலம் குருகிராம் டிஎல்எப் 3-ம் கட்ட பகுதியில் 23 ம் கட்டம் பகுதியில் உள்ள நாதுபூர் பகுதியில் 23 வயது பெண் ஒருவர் ,தனது ஆட்டோ ட்ரைவர் கணவரோடு வசித்து வந்தார் .அப்பெண் சில நாள் முன்பு இரவு நேரத்தில் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் இரண்டு பேர் அப்பெண்ணை வழி மறித்து அங்குள்ள ஒரு இருட்டான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தனர் .அப்போது அந்த பெண் தன்னிடமிருந்த போனில் அவரின் கணவரை கூப்பிட்டு தனக்கு இருவரால் நடக்கும் கொடுமையை அழுதபடியே கூறினார் .பின்னர் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கத்தியால் குத்தப்பட்டார்.
பிறகு  அந்த பெண்னின் கணவர் அந்த பெண்ணை தேடி கொண்டு பல இடங்கலில் சுற்றினார் .இந்நிலையில்  அந்த பெண் அங்கிருந்த் தப்பி வந்து தன் கணவரிடம் கூறியதும் இருவரும் சேர்ந்து அந்த நபர்கள் மீது அங்குள்ள பொலிஸில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அதில்  ஒருவரை கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட குற்றவாளி பீகாரை சேர்ந்த அனில் குமார் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்..பின்னர் அப்பெண் சப்தர்சிங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்