×

"இந்த போட்டோவிலிருக்கும் அழகான பொண்ணு  இப்ப உயிரோடு இல்லை" -ஒரு அதிகாரி செஞ்ச கொடுமையால் வந்த விபரீதம் .

 

ஒரு  கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரின் கணவர், மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவை சேர்ந்த 26 வயதான வித்யாஸ்ரீக்கும் ,பெலகாவியை சேர்ந்த ஆனந்த் காம்ளேவுக்கும்,  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து , தற்போது அவர்களுக்கு  9 மாத குழந்தை உள்ளது. ஓரு  கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் காம்ளே,  பஸ்கீபூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
அப்போது அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதனால் கணவர் வேலைக்கு போனதும் அந்த மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் 
 இந்த தற்கொலைக்கு கணவர் ஆனந்த் காம்ளே, அவரது தந்தையான சியாமின் கொடுமையே காரணம்,என வித்யாவின் தந்தை சித்தானந்த் கூறி,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரான கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஆனந்த் காம்ளே, அவரது தந்தை சியாமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.