×

"ஒவ்வொரு இரவும் உடலுறவுக்கு  மறுத்த மனைவி .." -வெறுத்த கணவன் என்ன செஞ்சார் பாருங்க. 

 


உறவுக்கு மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீஸ் கைது செய்தது 


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜோடானா தாலுகாவைச் சேர்ந்த தர்பார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் , எஸ்சி  சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த செப்டம்பர் மாதம் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர் .அதன் பிறகு இருவரும் தனியாக ஒரு வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் அந்த வாலிபர் தன் மனைவியை அழைத்து கொண்டு ஆறு மாதங்களுக்கு முன்பு தன் சொந்த கிராமத்திற்கு சென்றார் .அப்போது அந்த ஊரில் உள்ள மக்கள் அந்த மனைவியின் சாதியை சொல்லி கிண்டல் செய்தனர் .மேலும் அவரின் மாமியாரும் அந்த பெண்ணை தீண்டத்தகாதவர் என்று கூறி ஏற்றுக்கொள்ளவில்லை .
அதன் பிறகு அந்த தம்பதிகள் மீண்டும் நகர்ப்பகுதிக்கு வந்து விட்டனர் .இந்த சம்பவத்தால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார்  .அதன் பிறகு கடந்த ஐந்து மாதங்களாக அந்த பெண்ணை அவரின் கணவர் பலமுறை உடலுறவுக்கு கூப்பிட்டும் அவர் வர மறுத்து, அவரிடமிருந்து விலகியுள்ளார் .இதனால் அந்த கணவர் அந்த பெண்ணை பலமுறை பலமாக தாக்கினார் .இதனால் அந்த பெண் கோவப்பட்டு அங்குள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .அதன் பிறகு அவர்களின் உதவியோடு தன்னை தாக்கிய கணவர் மீது அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து  அந்த கணவரை கைது செய்தனர்