×

‘காய் வெட்டும் கத்தியால் கணவனை கொன்ற மனைவி’.. இயற்கை மரணம் என நாடகமாடியது அம்பலம்!

கோவை அருகே கணவனை மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே இருக்கும் திருமால் வீதியில் வசித்து வரும் தம்பதி பிரிட்டோ(38) – கரோலின்(31). இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லை என தெரிகிறது. திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று பிரிட்டோ கழுத்தில் காயங்களுடன் அரசு
 

கோவை அருகே கணவனை மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே இருக்கும் திருமால் வீதியில் வசித்து வரும் தம்பதி பிரிட்டோ(38) – கரோலின்(31). இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லை என தெரிகிறது. திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று பிரிட்டோ கழுத்தில் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரிட்டோ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டோ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்த வெரைட்டி ஹால் போலீசார், பிரிட்டோ கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? கழுத்தில் காயம் இருப்பது ஏன்? என கரோலினிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கரோலின், காய்கறி நறுக்கி விட்டு திரும்பும் போது பிரிட்டோ கழுத்தில் பட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியை எடுத்து பிரிட்டோ கழுத்தை கரோலின் வெட்டியதால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கரோலினை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதவு செய்துள்ளனர்.