×

"அந்தரங்கமாக இருந்த கணவனை "அந்தரங்கத்தில் "  உதைத்து .."கள்ள காதல் தகராறில் மனைவியால் வந்த வினை  

 


கர்நாடக மாநிலம் ஹாசன் ஹொளேநரசிபுராவின், ஹள்ளி மைசூரு கிராமத்தில் வசித்த 35 வயதான ரேவண்ணா, தன் காதல் மனைவியுடன் வசித்து வந்தார் . சில மாதங்களுக்கு பின் அந்த தம்பதிகளுக்குள் வந்த கருத்து வேறுபாடு காரணமாக அந்த ரேவண்ணா வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

ரேவண்ணா தன்னை  விட்டு சென்றதால், அவரின் மனைவி கவலைப்படாமல் வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டார். இது பற்றி கேள்விப்பட்டு  வீட்டுக்கு வந்த  ரேவண்ணா, மனைவியின் கள்ளத்தொடர்பை அறிந்து, திட்டி சண்டை போடத் துவங்கினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அந்த ரேவண்ணா மீண்டும் குடித்து விட்டு ,மது போதையில் அந்த காதல் மனைவியின் வீட்டுக்கு வந்து அவரின் கள்ள தொடர்பை விட்டு விட்டு, மீண்டும் தன்னோடு குடும்பம் நடத்த கூப்பிட்டார் .இதனால் அவர்களுக்குள் வந்த சண்டையில் அந்த பெண் தன் கணவரின் அந்தரங்க உறுப்பில் உதைத்து கொலை செய்து விட்டார் .பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் தன் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக பொய் சொன்னார் .பின்னர் பொலிஸார் அந்த ரேவன்னா உடலை பரிசோதனை செய்த போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து ,அவரின் மனைவியை விசாரித்தனர் . அப்போது அவர் தன் கணவரை  கொலை செய்ததை ஒப்புக்கொண்டதும் அவரை கைது செய்தனர் .