×

"கள்ள காதலன்தான் நல்லா செய்யுறான் அதனால ..."வெறி பிடித்த மனைவி -அடுத்து ஆடிட்டருக்கு நேர்ந்த கதி 

 

 தனியார் நிறுவன ஆடிட்டர் ஒருவரை அவரின் மனைவியே கள்ள காதல் தகராறில் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.


ஆந்திராவை சேர்ந்த 35 வயதான சங்கர் ரெட்டி ,  பெங்களூரு யஷ்வந்தபுரம் எம்.கே. நகரில் மனைவி டெல்லி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சங்கர் ரெட்டி தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக  பணியாற்றினார். இந்நிலையில் அப்பெண்  டெல்லி ராணிக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது,அதனால் அந்த கணவர் வெளியே வேலை விஷயமாக போகும் போதெல்லாம் அந்த கள்ள காதலனுடன் அந்த பெண் உல்லாசமாக இருக்க போய் விடுவார் .அப்போது அந்த கள்ள காதலன் அந்த டெல்லிராணிக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர் ஆசைப்பட்டதையெல்லாம் செய்திருக்கிறார் .இதனால் அப்பெண் கணவரை விட்டு விலக ஆரம்பித்ததும் , கணவர் சங்கர் ரெட்டி அதை தட்டி கேட்டார் .இதனால் இடையூறாக இருந்த அவரை கத்தியால் குத்தி டெல்லி ராணி கொலை செய்து விட்டார் .;பின்னர் போலீசுக்கு போன் செய்து கணவரை கொள்ளையர்கள் வந்து கொன்று விட்டதாக நாடகம் ஆடினார் 
  ஆனாலும் டெல்லி ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு , டெல்லி ராணியின் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரித்த போது தந்தையும், தாயும் சண்டை போட்டதாக கூறியது. இதன்பின்னர் டெல்லி ராணியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உண்மையை கண்டு பிடித்தனர் . . இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.