×

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்த கணவனை மனைவி திட்டமிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பள்ளியை சேர்ந்தவர் முத்துகாளை. இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ஹரிஷ் குமார் மற்றும் கிஷோர் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். கலையரசியும், கணவரும் கட்டட வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. கலையரசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த முத்துக்காளை
 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வந்த கணவனை மனைவி திட்டமிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பள்ளியை சேர்ந்தவர் முத்துகாளை. இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ஹரிஷ் குமார் மற்றும் கிஷோர் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். கலையரசியும், கணவரும் கட்டட வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.

கலையரசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதி என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த முத்துக்காளை மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் தர்மாபுரியில் உள்ள மனைவி வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது சகோதரருக்கு போன் செய்த முத்துகாளை தான் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி ஊருக்கு வரவில்லை. பின்னர் சகோதரரை காணவில்லை என கடந்த ஐந்தாம் தேதி ஈஸ்வரன் கலையரசி அழைத்துக்கொண்டு வீரபாண்டிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது மேலப்பட்டி செல்லும் காமாட்சிபுரம் அருகே உள்ள கிணற்றில் முத்துகாளை சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த மரணம் தொடர்பாக முத்து காளையின் சகோதரர் ஈஸ்வரன், அண்ணி கலையரசி மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார் இதைத்தொடர்ந்து கலையரசிடம் வீரபாண்டி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.

தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு தனது கணவர் முத்துகாளை இடையூறாக இருப்பதாக எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் கலையரசி. அந்த வகையில் முத்து காளையை தனியாக யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்ற கலையரசி , தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு பின் அங்கிருந்த கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

கலையரசியின் வாக்குமூலத்தை அடுத்து முத்துகாளை கொலை சம்பவத்தில் கலையரசி மற்றும் அவரது ஆண் நண்பர் சேதுபதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.