×

"மனைவியை மாத்திக்கோ ,ஆசைய தீர்த்துக்கோ" -5000 பேருடன் உருவான குரூப்பில் நடந்த கொடுமை 

 


மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவித்த ஒரு க்ரூப்பை போலீசார் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 


கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் நகரில் வசிக்கும் அரபு  நாட்டிலிருந்து வந்த ஒருவர் அங்கு 5000 உயர் வகுப்பு குடும்பத்தினரை வைத்து ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பினை உருவாக்கினார் .அந்த க்ரூப்பில் பல டாக்டர்கள் ,வக்கீல்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினராக இணைந்தனர் .அப்போது அந்த க்ரூப்பில் இருக்கும் ஆண்கள் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருப்பார்களாம் ,அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு நடக்கும் பார்ட்டிக்கு அவர்கள் தங்களின் மனைவிகளை அழைத்து கொண்டு வந்து இப்படி குலுக்கள் முறையில் மாற்றி மாற்றி இயற்கைக்கு மாறான முறையில் ஆசையை தீர்த்து வந்தனர் .இதில்  கலந்து கொண்ட பல பெண்கள் வற்புறுத்தி இப்படி தகாத செயலில் அவர்கள் கணவர்கள் ஈடுபட வைத்துள்ளனர் .அதனால் பல பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர் 
இதுபற்றி பாதிக்கப்பட்ட ஒரு பெண் அங்குள்ள போலீசில் தன்னை தன் கணவர் இப்படி கொடுமை படுத்துவதாக புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த க்ரூப்பை பற்றி விசாரணை மேற்கொண்டனர் .அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது .பல குடும்ப பெண்களை அவர்களின் கணவர்கள் இப்படி டார்ச்சர் செய்து இந்த பலான வேளையில் ஈடுபட வைத்ததை  கண்டறிந்து ஆறு பேரை முதலில் கைது செய்தனர் .