×

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி! நண்பனே துரோகியான சோகம்

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவால் கணவரை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், கரிவிடி மண்டலம், கோனூரைச் சேர்ந்த அல்லாட நாகராஜு (39) மற்றும் ரம்யா (36) ஆகியோர் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வந்து மதுரவாடாவின் பி-2 காலனியில் வசிக்கின்றனர். நாகராஜு ஒரு தனியார் பாதுகாவலராக பணிபுரிகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்கலி பகுதியைச் சேர்ந்த வசந்த ராவ் (31) உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வசந்த ராவ் விசாகப்பட்டினம் காஞ்சரபாலம் தர்மநகரில் வசிக்கிறார். வசந்த ராவ் நாகராஜுவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும்போது  ரம்யாவுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு ஏற்பட்டது. சில மாதங்கள் கழித்து நாகராஜு இதை கவனித்து மனைவியைக் கண்டித்தார். ஆனால் ரம்யா  நடத்தை மாறவில்லை, மேலும் தன் காதலன் வசந்த ராவுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்து வசந்த ராவிடம் தெரிவித்தார்.  

நாகராஜுவைக் கொல்ல விரும்பிய வசந்த ராவ், ஐயப்பனுக்கு மாலை அணிந்தபோது ராம்பாபு மற்றும் பாண்டு என்ற இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாகராஜுவை கொலை செய்யும் திட்டத்தை கூறினர். இதனையடுத்து ஐயப்ப மாலை கழற்றிய பிறகு நாகராஜுவை கொலை செய்ய  மூவரும் முடிவு செய்தனர். அதற்காக ரம்யாவும் வசந்த ராவும் அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்தனர். திட்டமிட்டப்படி ஐயப்ப மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்ததும், மது அருந்துவதற்கு அடிமையான நாகராஜுவை வசந்த ராவ் திட்டமிட்டபடி மது அருந்த அழைத்தார். அதற்கு முன், வசந்த ராவ் ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு அழைத்து சென்று அனைவரும் மது அருந்தினர். அதிகமாக மது அருந்திய  குடிபோதையில் இருந்த நாகராஜுவை அனைவரும் சேர்ந்து ​​ தலையணையால் முகத்தை மூடி அவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். பின்னர் வாடகை பைக்கை பெற்று வந்து  நாகராஜு உடலை ஹோட்டல் அறையில் இருந்து பைக்கில் கொண்டு செல்லப்பட்டு, திம்மாபுரம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வீசினர். 

நாகராஜுவைக் கொல்ல விரும்பிய ரம்யா உட்பட நான்கு குற்றவாளிகளும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.  அதில் சமீப காலமாக செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். எனவே கொலை நடந்த நாளில், ரம்யாவும், வசந்த ராவும் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தவில்லை, சந்தேகத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். நாகராஜு கொலைக்குப் பிறகு, ரம்யா பி.எம்.பாலம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது கணவர் காணவில்லை என்றும், அவர் ஒரு மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்தார்.  ஆனால் ரம்யா - வசந்த ராவ் இடையேயான தகாத உறவுதான் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில்  நாகராஜு இறந்த பிறகு  ​​ரம்யாவும் வசந்த ராவும் வேறு அறை  வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். 

தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதனையடுத்து ரம்யா, வசந்த ராவ், ராம்பாபு மற்றும் பாண்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாகராஜுவின் உடல் ஒரு வெறிச்சோடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.