×

உதவி தொகை வாங்க சென்ற விதவை -உதவுவதாக வந்த கூட்டம் -அடுத்து நடந்த கொடுமை

ஒரு அரசு அலுவலகத்திற்கு உதவி தொகை வாங்க சென்ற ஒரு விதவை பெண்ணை ஒரு அலுவலர் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர் உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இளம் விதவை பெண்,பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ .5 லட்சம் உதவி தொகையை பெறுவதற்கு அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு சென்றார் .அப்போது அந்த ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு எழுத்தர் அந்த பெண்ணிடம் தான் அந்த உதவி
 


ஒரு அரசு அலுவலகத்திற்கு உதவி தொகை வாங்க சென்ற ஒரு விதவை பெண்ணை ஒரு அலுவலர் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர்


உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு இளம் விதவை பெண்,பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ .5 லட்சம் உதவி தொகையை பெறுவதற்கு அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு சென்றார் .அப்போது அந்த ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு எழுத்தர் அந்த பெண்ணிடம் தான் அந்த உதவி தொகையை வாங்கி கொடுப்பதாக கூறி அதற்கு லஞ்சமாக 2000 ரூபாய் தரவேண்டுமென்று பேசி முடிக்கப்பட்டது .அதன் பிறகு அந்த எழுத்தர் அந்த பெண்ணை ஒரு அதிகாரியை பார்க்க வேண்டுமென்று கூறி ஒரு இடத்திற்கு வர சொன்னார் .
அதை நம்பி சென்ற அந்த பெண்ணை அந்த அலுவலர் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு அவர்கள் அந்த பலாத்கார காட்சியை வீடியோவும் எடுத்தனர் .பிறகு அந்த வீடியோவை காமித்து மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்தனர் .இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஒரு தோப்பில் நடந்தது.இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர்கள் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர்களை பிடித்து அவர்களை விசாரித்து வருகின்றனர் .