×

“கல்யாணத்துக்கு வந்தார் ,பணப்பையுடன் பறந்தார்” -மண்டபத்தில் மாயமான 3.5 லட்சம்

ஒரு செல்வந்தர் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர், அங்கிருந்த பணப்பையுடன் தப்பித்து ஓடியதால் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள். சண்டிகரில் உஷா தாக்கூர் என்பவர் தன்னுடைய மகளுக்கு அங்குள்ள சன்பீம் ஹோட்டலில் திருமணம் நடத்தினார் .அப்போது அந்த கல்யாணத்திற்காக அவர் செலவு செய்ய 3.5 லட்சம் பணத்தையும் .ஒரு வைர மோதிரத்தையும் ,2 செல்போனையும் ஒரு பையில் வைத்திருந்தார் .கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது .பலர் மணப்பெண்மற்றும் மாப்பிள்ளைக்கு சீர்வரிசைகள் செய்து கொண்டிருந்தார்கள் .பலர்
 


ஒரு செல்வந்தர் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர், அங்கிருந்த பணப்பையுடன் தப்பித்து ஓடியதால் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

சண்டிகரில் உஷா தாக்கூர் என்பவர் தன்னுடைய மகளுக்கு அங்குள்ள சன்பீம் ஹோட்டலில் திருமணம் நடத்தினார் .அப்போது அந்த கல்யாணத்திற்காக அவர் செலவு செய்ய 3.5 லட்சம் பணத்தையும் .ஒரு வைர மோதிரத்தையும் ,2 செல்போனையும் ஒரு பையில் வைத்திருந்தார் .
கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது .பலர் மணப்பெண்மற்றும் மாப்பிள்ளைக்கு சீர்வரிசைகள் செய்து கொண்டிருந்தார்கள் .பலர் திருமண விருந்தை சாப்பிட சென்று கொண்டிருந்தார்கள் .இந்த கொரானா நேரத்திளும் அந்த செல்வந்தர் வீட்டு திருமனத்தில் கூட்டம் அலைமோதியது .அப்போது திடீரென அந்த மண்டபத்திலிருந்து பணமும் ,மோதிரமும் இருந்த பையை காணவில்லை .அந்த நேரத்தில் அந்த பெண்னின் தந்தை பணத்தை காணாததால் அலறினார் .அதனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அந்த பணத்தை தேடினார்கள் .ஆனால் அது அப்போது கிடைக்கவில்லை .அதனால் பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்தார் .போலீசார் மண்டபத்திற்கு விரைந்து வந்து அங்கு சிசிடிவி கேமெரா காட்சிகளை சோதனையிட்டார்கள் .அப்போது ஒருவர் பணப்பையுடன் ஓடுவதை கண்டார்கள் .பிறகு போலீஸ் அவரின் போட்டோவை நகரின் பல இடங்களில் வெளியிட்டு தேடி வருகிறார்கள் .