×

‘அண்ணா.. என்ன விட்ருங்கண்ணா’ : இளைஞரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கிய கும்பல்!

தஞ்சாவூர் அருகே கும்பல் ஒன்று காட்டுமிராண்டித் தனமாக ஒரு நபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் ராகுல்(22). இவர் மணல் திருடி விற்பனை செய்து வரும் ஒரு நபரிடம் வேலை பார்த்து வரும் நிலையில், பணத்தை திருடியதாக ஒரு கும்பல் இவரை சரமாரியாக தாக்கிய வீடியோ இன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ராகுலின் கண்ணைக் கட்டிய கும்பல் கம்பை எடுத்து அவரை கதற கதற
 

தஞ்சாவூர் அருகே கும்பல் ஒன்று காட்டுமிராண்டித் தனமாக ஒரு நபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் ராகுல்(22). இவர் மணல் திருடி விற்பனை செய்து வரும் ஒரு நபரிடம் வேலை பார்த்து வரும் நிலையில், பணத்தை திருடியதாக ஒரு கும்பல் இவரை சரமாரியாக தாக்கிய வீடியோ இன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ராகுலின் கண்ணைக் கட்டிய கும்பல் கம்பை எடுத்து அவரை கதற கதற தாக்குகிறது.

‘என்னை விட்ருங்க’ என ராகுல் கெஞ்சியும் அடிப்பதை நிறுத்த மறுத்த அந்த கும்பல், ராகுலை குனிய வைத்து காலில் கம்பை வைத்து அடிக்கிறது. ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத ராகுல், அங்கேயே மயங்கி விழுகிறார். ராகுலை அந்த கும்பல் தாக்குவதை வீடியோ எடுத்த கும்பலின் தலைவன், சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து இருக்கிறார்.

ராகுல் தாக்கப்பட்டதற்கான காரணம் பற்றி ஆராய்ந்ததில், அவர் ஒரு வீட்டில் ரூ.30,000 பணத்தை திருடிவிட்டதாகவும் அதனால் அவர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ராகுலை கதற கதற அடித்து உதைத்த கும்பலை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.