“டேய் எவ்ளோ திமிர் இருந்தா போலீசையே சுடுவீங்க” எட்டு போலீசை சுட்ட துபேவின் கூட்டாளியை என் கவுன்டரில் சுட்டனர் ..
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் எட்டு போலிசை சுட்டுக்கொன்ற கேங்க்ஸ்டர் விகாஸ் துபேயின் உதவியாளர் அமர் துபே இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே , கான்பூரின் பக்கத்து மாவட்டமான ஹமீர்பூரின் மோத்தா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் அவரின் உதவியாளர் அமர் துபே கொல்லப்பட்டார் .
இதற்கிடையில், துபேவுடன் இருக்கும் 18 ரௌடிகளையும் கைது செய்ய காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ‘மோஸ்ட் வாண்டட்’ சுவரொட்டிகள் உத்தரபிரதேசம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.