×

“முதலில் நீ ,அடுத்து நான்,அடுத்து .. “கரும்பு தோட்டத்தில் பெண்ணை பங்கு போட்ட வாலிபர்கள்

வயல் வெளியில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணை பாலியல் கொடுமை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் உத்தரபிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கைராஹி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை வசதியில்லை .அதனால் அங்குள்ள பல பெண்கள் இரவு நேரத்தில் வயல் வெளியில் இயற்கை உபாதைக்கு செல்லும் பழக்கம் இருந்துள்ளது .இதை அந்த பகுதியில் வசிக்கும் ஐந்து டீனேஜ் வாலிபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் . அதன்படி சுமார் பத்து நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் இரவு
 

வயல் வெளியில் இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணை பாலியல் கொடுமை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

உத்தரபிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கைராஹி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கழிப்பறை வசதியில்லை .அதனால் அங்குள்ள பல பெண்கள் இரவு நேரத்தில் வயல் வெளியில் இயற்கை உபாதைக்கு செல்லும் பழக்கம் இருந்துள்ளது .இதை அந்த பகுதியில் வசிக்கும் ஐந்து டீனேஜ் வாலிபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .

அதன்படி  சுமார் பத்து நாட்களுக்கு முன்பு  ஒரு இளம் பெண் இரவு நேரத்தில் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார் .அப்போது அதை நோட்டமிட்ட அந்த பகுதி வாலிபர்கள் அந்த ஐந்து பேரும் அவரை பின் தொடர்ந்து வந்தனர் .பிறகு அவர்கள் அந்த பெண்ணை தாக்கினார்கள் .பிறகு அவர்கள் அவரின் ஆடைகளை உருவினார்கள் .அதை ஒருவர் வீடியோ எடுத்தார் .மற்றவர்கள்  அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர் .பின்னர் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பியோடினார் . அதன் பிறகு அந்த வாலிபரில்  ஒருவர் இந்த பாலியல் வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார் .அந்த மூன்று நிமிட  வீடியோ அந்த பகுதி மக்களிடையே வைரலானது ,பின்னர் அந்த வீடியோ  போலீசாருக்கும் சென்றது .அந்த  வீடியோவை பார்த்த போலீசார் அந்த நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்க தொடங்கினர் ,அதனால் அவர்களை பிடித்து அவர்கள்  மீது வழக்கு பதிந்தனர் .பிறகு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ,மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்