“பெண் குழந்தை பிறந்தது ,தந்தையின் இதயம் துடித்தது” -ஆண் குழந்தை ஆசையில் அப்பா செஞ்ச தப்பான வேலை
நீண்ட நாள் கழித்து கர்ப்பமான தன்னுடைய மனைவி, பெண் குழந்தை பெற்றதால் கோபமுற்ற அந்த குழந்தையின் தந்தை அந்த குழந்தையை தன்னுடைய காலால் மிதித்து கொன்றுள்ளார்.
ஹரியானாவின் யமுநானகரைச் சேர்ந்த நீரஜ் என்பவர் வர்ஷா என்ற பெண்ணோடு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் .திருமணமாகி கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் போகாத கோவிலில்லை ,பார்க்காத வைத்தியமில்லை .இந்நிலையில் கடந்த ஆண்டு அவரின் மனைவி கர்ப்பமானர். அவர் கர்ப்பமானதும் அதை கேட்டு அவரின் கணவர் நீரஜ் அதிக சந்தோஷம் அடைந்தார்,இதனால் அவர் தன் மனைவி வர்ஷாவை கண்னும் கருத்துமாக கவனித்து கொண்டார் .பிறகு பத்து மாத கர்ப்பத்துக்கு பிறகு அவரின் மனைவி வர்ஷா கடநத வாரம் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றார் .
ஆனால் தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்ததும் அந்த தந்தை மனமுடைந்தார் .அதனால் அந்த குழந்தையை எப்படியாவது கொன்று விட துடித்தார் .அதனால் கடந்த வாரமொருநாள் அவர் நன்றாக குடித்துவிட்டு அந்த ஆறுநாள் குழந்தையருகே தூங்குவது போல் நடித்து பக்கத்தில் படுத்தார் .அப்போது அவர் தனது காலால் அந்த குழந்தையை கழுத்தில் மிதித்தார் .அப்போது அந்த குழந்தை மூச்சி திணறி இறந்தது .குழந்தை இறந்து கிடப்பதை பார்த்த அந்த குழந்தையின் தாயார் வர்ஷா தனது குழந்தையை கொண்றதாக கணவர் நீரஜ் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நீரஜை விசாரித்தபோது அவர் தம்முடைய குற்றத்தை ஓப்புக்கொண்டார் .இதனால் போலீசார் ஒரு கொலை வழக்கில் அவரை கைது செய்தனர்