×

“கூல் ட்ரிங்ஸ் குடித்தார் , மயங்கி விழுந்தார்” -இளம்பெண்ணுக்கு ஆறு நண்பர்களால் நடந்த அநியாயத்த பாருங்க ..

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை அவரின் ஆறு நண்பர்கள் கூல்ட்ரிங்சில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது . உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தின் காதிமா நகரில் வசிக்கும் ஒரு கல்லூரி பெண் ஜூலை 9 ஆம் தேதி தனது கல்லூரி நூலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் அவரின் மூன்று நண்பர்கள் அவரை சந்தித்தனர் .அப்போது அந்த பெண்ணுக்கு அந்த நண்பர்கள் மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் வாங்கி
 

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை அவரின் ஆறு நண்பர்கள் கூல்ட்ரிங்சில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது .

உத்தரகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தின் காதிமா நகரில் வசிக்கும் ஒரு கல்லூரி பெண் ஜூலை 9 ஆம் தேதி தனது கல்லூரி நூலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் அவரின் மூன்று நண்பர்கள் அவரை சந்தித்தனர் .அப்போது அந்த பெண்ணுக்கு அந்த நண்பர்கள் மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் வாங்கி தந்தனர் .நண்பர்கள் வாங்கி தந்த கூல்ட்ரிங்க்ஸை குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்தார் .
அப்பெண் மயங்கி விழுந்ததும் அந்த மூவரும் அந்த கல்லூரி பெண்ணை ஒரு காரில் தூக்கி போட்டு கொண்டு உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றனர் .

அப்போது அங்கு அவரோடு இன்னும் மூன்று நண்பர்கள் சேர்ந்து கொண்டனர் .பிறகு அந்த ஆறுபேரும் சேர்ந்துகொண்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே விட்டு விட்டு ஓடி போய் விட்டனர் .பிறகு மயக்கம் தெளிந்த அந்த பெண், அங்கிருந்து மெல்ல நடந்து சென்று அங்குள்ள உறவினர் வீட்டையடைந்தார் .பிறகு அவரின் உறவினர்களிடம் தனக்கு ஆறு பேரால் நடந்த பாலியல் பலாத்கார கொடுமையினை கூறினார் .
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தனர் .அந்த பெண்ணின் புகாரை விசாரித்த போலீசார் ,ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ,மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் .மீதமுள்ள மூவரை தேடி வருகின்றனர் .